கொரோனாவால். கோடம்பாக்கத்தில் பல பிரபலங்கள், தங்கள் ரத்த சொந்தங்கள் வெளிநாடுகளில் சிக்கி இருப்பதால், தவித்து துடிப்பது தெரிந்த விஷயம்.

வெளிநாட்டில் படித்து வரும் நடிகர் விஜய் மகன், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நாடு திரும்ப முடியவில்லை.

இதனால் விஜய், மனரீதியாக சோர்வு அடைந்துள்ளார்.

மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனனும், அதே போன்ற மன அழுத்தத்தில் இருக்கிறார்.

அவரது தம்பி ஆதித்யா, இங்கிலாந்தில் தொல்லியல் வரலாற்று படிப்பு படித்து வருகிறார்.
அங்கிருந்து இந்தியா வர விமானம் ஏதும் இல்லாததால், ஆதித்யா லண்டனில் சிக்கி தவிப்பதாக மாளவிகா கவலையுடன் சொல்கிறார்.

‘’ ஆதித்யா, தான் படிக்கும் கல்லூரி அருகே தனி அறை எடுத்து தங்கியுள்ளான். ஒரே ஒரு அறைதான். அவனது நண்பர்கள், சொந்த ஊர்களுக்கு பறந்து விட்டார்கள்.

இவன் மட்டும் தான் ரூமில் தனியாக இருக்கிறான். கொரோனாவால் லண்டன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆதித்யா மனச்சோர்வு அடைந்துள்ளான்.

அங்கு சரியான சாப்பாடு கூட இல்லை. லண்டனில் எங்களுக்கு உறவினர்கள் கிடையாது. அவன் உடல் நிலை மற்றும் மனநிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது’’ என்று கண்ணீர் வடிக்கிறார், மாளவிகா.