சென்னை: ‘முதல்வரின் முகவரி’ புதிய துறை உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதற்கான  அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதல்வரின் முகவரி என்ற பெயரில் புதியதுறை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்ததுறையின்கீழ், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்வு மேலாண்மை மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், தகவல்கள் பெறுவதற்காகவும், மனுக்களை பதிவு செய்வதற்காகவும், இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும்  உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், ‘முதல்வரின் முகவரி’ புதிய துறை தொடர்பாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.