காஞ்சிபுரம்

றைந்த சங்காராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு இஸ்லாமியர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.   அவருடைய மரணம் இந்து மக்களிடையே துக்கத்தை உண்டாக்கி உள்ளது.   அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி,  பிரதமர், ஆளுனர்,  தமிழக முதல்வர்,  காங்கிரஸ் கட்சித்தலைவர், உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் சங்கரமடம் அருகே ஒரு பள்ளி வாசல் உள்ளது.   அங்கிருந்து வந்த இஸ்லாமிய மக்கள் ஜெயேந்திரருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி உள்ளனர்.     இந்த செய்கையை அனைத்து மதத்தினரும் பாராட்டி உள்ளனர்.