லக்னோ: உடல்நலப் பிரச்சினையால் அவதியுறும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று திரும்பினார்.
இந்நிலையில் ஞாயிறன்று (10ம் தேதி) அவருக்கு மீண்டும் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது, “அவரது குடலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்து வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்றனர்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முலாயம்சிங், கடந்த சனிக்கிழமைதான் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.