காரைக்கால்:
டிப்பில் போட்டியின் காரணமாக 8-ம் வகுப்பு மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த சக மாணவியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைக்கால் அடுத்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மாலதி. ராஜேந்திரன் காரைக்காலில் நியாய விலை கடையில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார்.ராஜேந்திரன் மாலதி தம்பதிகளுக்கு ஒரு பெண்ணும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. ராஜேந்திரனின் இரண்டாவது மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் பால மணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும்,விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள துடிப்பான சிறுவனாக பள்ளியில் வலம் வருகிறான். இந்நிலையில் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகைகளில், பால மணிகண்டன் கலந்து கொண்டுள்ளார்.

இதனிடையே ஒத்திகை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் பால மணிகண்டன், வாந்தி எடுத்து மயக்கமுற்றார். தாய் மாலதி, பள்ளியில் கூல்ட்ரிங்ஸ் கொடுத்தது யார் என கேட்டார். ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே பால மணிகண்டன் மயங்கிவிழுந்தார். உடனே பெற்றோர் பதறிப்போய் மணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக பெற்றோர், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து விட்டு,பின்னர் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தனர். இதில் பால மணிகண்டனுடன், வகுப்பில் படிக்கும் சக மாணவி அருள் மேரியின் தாய் சகாயராணி விக்டோரியா, வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் வெள்ளை நிற பையில் இரண்டு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வைத்து, எட்டாம் வகுப்பில் படிக்கும் பால மணிகண்டனிடம் அவரது உறவினர் கொடுக்க கூறி கொடுத்து இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பால மணிகண்டனின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காரைக்கால் நகர காவல் ஆய்வாளர் சிவகுமார், சகாயராணி விக்டோரியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் பால மணிகண்டனுக்கும், மாணவி அருள் மேரிக்கும் வகுப்பில் முதல் மாணவன் யார் என்பதில் போட்டியிருந்ததாகவும், இதனால் பால மணிகண்டன் மீது அருள் மேரியின் தாய் சகாய ராணி விக்டோரியா மோதல் போக்கை கடைபிடித்ததாகவும், நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சியில் சிறுவன் பால மணிகண்டன் நடன நிகழ்சியில் பங்கேற் கூடாது என எண்ணிய சகாய ராணி விக்டோரியா, உறவினர் என்ற போர்வையில் நஞ்சு கலந்த பொருளை கூல்டிங்ஸில் கலந்து தனது மகன் பால மணிகண்டனிடம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.