போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று அரையாறுதிக்கு முன்னேறியது மொராக்கோ.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

பிரான்ஸ் – இங்கிலாந்து இடையிலான காலிறுதி போட்டியில் வெல்லும் அணியை அரையாறுதியில் எதிர்கொள்ள இரு்கிறது மொராக்கோ.

ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியிடம் பெரும்பான்மையான நேரம் பந்து இருந்தும் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டு வெளியேறியது.

கால்பந்து போட்டியில் காலம்காலமாக கோலோச்சிய அணிகள் எல்லாம் வெளியேறியதை அடுத்து கத்தார் உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

தவிர இந்த போட்டிக்குப் பின் ரொனால்டோ வேறு எந்த முக்கிய போட்டியிலும் விளையாட போவதில்லை என்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.