தென்காசி:
குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி மாவட்டத்தில், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து குறைந்த அளவே காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்த அளவை காணப்பட்டு வருகிறது. மேலும், ஐந்தருவியில் உள்ள 5 அருவிகளில் 2 அருவிகளில் மட்டுமே தண்ணீர் வரத்து சீராக வந்து கொண்டிருக்கும் சூழலில், மற்ற அருவிகளில் நீர்வரத்து குறைந்த அளவே காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.