சென்னை: தமிழக அரசில் 3லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அரசு காலி பணியிடங்கள் குறித்து கேள்வி எழுப்பிய உறுப்பினருக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர், மாநலி அரசு பணிகளில் 3 லட்சத்துக்கு மேல் அரசு காலிப் பணியிடங்கள் உள்ளதாகதெரிவித்துள்ளார்.

இதனை சரி செய்யும் வகையில் டி.என்.பி.எஸ்.சி  தேர்வு எவ்வாறு நடத்துவது, தேர்வுக்கான பயிற்சி எவ்வாறு வழங்குவது தேர்வு முறையில்  உள்ள குளறுபடிகளை எவ்வாறு சரி செய்வது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய தனி நிபுனர் குழு தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டு இருப்பதாகவும்,  நிபுணர் குழு அதற்கான ஆய்வு அறிக்கை 6மாத காலத்திற்குள்  சமர்ப்பிக்கும். அதை பெற்ற பிறகு, அதன் அறிக்கையின் அடிப்படையில் அரசு தேர்வு முறை மற்றும் அரசு வேலைவாய்ப்பில்  சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.