மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸும் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை சுமார் 62.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 1,31,605 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 60.46 லட்சம் பேர் குணமடைந்து தற்போது 88,729 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கையிலும் மகாராஷ்டிர முதல் இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் 2 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.   இதுவரை 3,00,27, 217  பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.   இந்த தகவலை அம்மாநில சுகாதார கூடுதல் தலைமை செயலர் பிரதிப் வியாஸ் தெரிவித்துள்ளார்.