சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.3000 உரிமை தொகை வழங்கப் படும் என அறிவித்துள்ளதுடன், மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

திமுக ஏற்கனவே அறிவித்தபடி மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கி வரும் நிலையில், அதற்கு போட்டியாக அதிமுக சார்பில் மாதம் ரூ.3000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடித்து, தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.    அதில், மகளிருக்கு ரூ.3000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துடள்ளதுடன், இந்த ரூ.3,000 ரூபாயை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என தெரிவித்து உள்ளது.

* ஆளுநர் பதவி நியமன முறையில் கருத்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

* நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை வேண்டும்.

* மாதந்தோறும் ஏழை மகளிருக்கு ரூ.3000 வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்ப்படும்.

* முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

* உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.

* நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை சென்னையில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

* பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயத்தை மேற்கொண்டு, விலைகள் குறைக்கப்பட வேண்டுமென்று அதிமுக வலியுறுத்தும்.

* சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தப்படும்.

* மத்திய, மாநில அரசுகள், பெருகி வரும் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.

* இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

* நெகிழி பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசின் உதவியோடு மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

* 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தப்படும்.

* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு கல்விக் கடனை முழுமையாக ஏற்று தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

என்பது உள்ளிட்ட 133 பாயிண்டுகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

திமுக ஏற்கனவே அறிவித்தபடி மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கி வரும் நிலையில், அதற்கு போட்டியாக அதிமுக சார்பில் மாதம் ரூ.3000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. மொத்தத்தில் தமிழர்களை சோம்பேறிகளாக்கவும், குடிகாரர்களாகவும் மாற்றி வருகின்றன இரு திராவிட கட்சிகளும் என்பதில் ஐயமில்லை.