பாட்னா

முதல்வர் அறிவித்துள்ள முதியோர் உதவித் தொகை உயர்வனது 7 மாதம் முன்பே நா/ங்கள் அறிவித்தது தான் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

 

பீகார் தேர்​தலில் பாஜக-ஐக்​கிய ஜனதா தளக் கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிர்ய ஜனதா தளம், , காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி உள்ளது. தேர்தலையொட்டி ஆளும் பாஜக கூட்டணி மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது

ராஷ்ட்ரிய ஜனதா தளைத் தலைவர்  தேஜஸ்வி யாதவ் செய்​தி​யாளர்​களிடம்

“பீகார் முதல்​வர் நிதிஷ் குமார், தற்​போது சுயநினை​வின்றி உள்​ளார். செயல்​ப​டாத முதல்​வ​ராக இருக்​கிறார். அவரால் அவரது கட்சி வேட்​பாளர்​களைக் கூட தேர்வு செய்ய முடி​யாத நிலை​யில் உள்​ளார். அவருக்கு பதிலாக ஐக்​கிய ஜனதா தள கட்சி வேட்​பாளர்​களைக் கூட மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தான் தேர்வு செய்​யப் போகிறார்.

பிஹாரில் மெகா கூட்​டணி கூட்​டணி ஆட்​சி​யில் இருந்​த​போது பென்​ஷன் தொகை உயர்வு உள்​ளிட்ட திட்​டங்​களைக் கொண்டு வந்​தது. அந்​தத் திட்​டங்​களை அப்​படியே காப்​பியடித்து தற்​போது தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) அரசு செயல்​பட்டு வரு​கிறது. நாங்​கள் 7 மாதங்களுக்கு முன்பே கொடுத்த அறி​விப்​பு​களை​யெல்​லாம், தாங்​கள் கொண்டு வந்து செயல்​படுத்​து​வது போல அவர்​கள் செயல்​படு​கின்​றனர்.

எனக் கூறி​யுள்​ளார்.