பீகார் மாநிலம் பெகுசராயில் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சாஹிப்பூர் கமால் மற்றும் பெகுசராயில் ரயில் நிலையத்துக்கு இடையே நடைபெற்ற இந்த சம்பவத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் ரயிலின் வெளியே இருந்து ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளான்.

அருகில் இருந்த ஒரு பயணி சுதாரித்துக் கொண்டு அந்த திருடனின் கையை பிடித்துக் கொண்டார் ரயிலும் வேகமெடுத்ததை அடுத்து இதனை சற்றும் எதிர்பாராத அந்த திருடன் ரயிலில் இருந்தவரிடம் தன்னை விட்டுவிடாதீர்கள் கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் என்று அலறினான்.

மொபைலை பறிகொடுக்க இருந்தவர் அவனை அப்படியே விட்டுவிடுங்கள் என்று கத்தியபோதும் அவனது மற்றொரு கையையும் பிடித்துக் கொண்டனர்.சுமார் 20 கி.மீ. ரயிலுக்கு வெளியில் தொங்கியபடி பயணம் செய்த அவனை அடுத்த ரயில் நிலையத்தில் போலீசில் ஒப்படைத்தனர்.