சென்னை:

ன்னியாகுமரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன்ராதாகிருஷ்ணனை  தோற்கடித்து அமோகமாக  வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், அடுத்த 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று வசந்தகுமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார்,  நாட்டின் வேலைவாய்ப்பு போக்க முயற்சி எடுப்பேன் என்றவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப்படும். தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.

கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். பா.ஜனதாவை எதிர்ப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.