கோவை:

கோவை தெற்கு தொகுதி, எம்.எல்,ஏ., அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை தெற்கு தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன். இவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோருடன், மதுரையில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பினர். இதையடுத்து, வீட்டில் உள்ள அனைவருக்கும், கடந்த, 29-ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. மூவரும், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோர், தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவருக்கு நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தொற்று உறுதியானது.இதையடுத்து அவர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு, நேற்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.