சென்னை: 
மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று  முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அப்போது அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத்,  நாட்டின் சிறந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன. தந்தை கருணாநிதி போலவே மகனும் இருக்கிறார். நாளொன்றுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார்  என்று தெரிவித்தார்.