திருவள்ளூர்

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவை சோதனைகள் மூலம் அச்சுறுத்த முடியாது எனக் கூறி உள்ளார்.

இன்று திருவள்ளூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.  உடல்நலக் குறைவு காரணமாக தமிழக் முதல்வர் முக ஸ்டாலினால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.  எனவே முதல்வர் மு.க ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி வாசித்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தனது உரையில்

“அதிமுகவை சோதனை மூலமாக  மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல திமுகவையும் மிரட்டலாம் என பாஜகவினர் பகல் கனவு காண்கிறார்கள். திமுக இந்த சலசலப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்படும் இயக்கம் இல்லை.

கடந்த 75 ஆண்டு காலமாக நாம் இதையெல்லாம் எதிர்த்து நின்றுதான் வெற்றி பெற்று இருக்கிறோம். வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாகவே செயல்படுகிறது.  வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன” 

என்று தெரிவித்துள்ளார்.