சென்னை

இன்னும் ஓரிரு நாட்களில் அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்,

”இன்னும் ஓரிரு நாட்களில் அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியாகும். நீட், கிளாட் போன்ற தேர்வுகள் பொதுத்தேர்வு தேதிகளோடு வராத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மூன்று வகையான அட்டவணை தயாராக உள்ளது.

தமிழக அரசு சார்பில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நீட் தேர்வு பயிற்சிக்கு 46,216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29279 மாணவர்களும், 31,730 மாணவர்கள் இரண்டுக்கும் சேர்ந்து விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

தற்போது மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு கட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன.”

என்று தெரிவித்துள்ளார்.