சென்னை

மைச்சர் முத்துசாமி டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் மதுக்கடைகள் காலையிலேயே திறக்கப்படுமா என்று சர்ச்சை எழுந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார். கடைகள் வழக்கம் போல நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம்,

”அரசிடம் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்ற எந்த திட்டமும் இல்லை.  அரசு 90 மிலி மதுபாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழக அரசின் நோக்கம் மது குடிப்போர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே ஆகும்.. சங்க நிர்வாகிகளிடம் டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் குறித்துப் பேசி வருகிறோம்.

மதுபானங்களுக்கு டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இடம் குறைவாக இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் பில்லிங் இயந்திரம் வைக்க முடியாமல் உள்ளது. புதியதாக இடமாற்றம் செய்யப்படும் கடைகளின் அளவு 500 சதுர அடிக்கும் மேல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எனவே இடவசதி உள்ள கடைகளில் பில்லிங் இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்”.

எனத் தெரிவித்துள்ளார்.