சென்னை

மிழக சட்ட அமைச்சர் ரகுபதி திமுகவுக்கும் ஜாபர் சாதிக்குக்கும் எந்த் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி தலைநகர் டில்லியில் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோபெட்ரின் என்ற வேதிப்பொருளை 50 கிலோவுக்கு அதிகமாகப் பறிமுதல் செய்தனர். இதையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு இவர்கள் கடந்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழகத்தைச் சேர்ந்த திரைத்துறை தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. ஜாபர் சாதிக் குறித்த பின்னணியை, மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் சேகரித்தபோது அவர், தி.மு.க.வில் அயலக அணி சென்னை மேற்கு துணை அமைப்பாளராக இருந்ததும், ஏற்றுமதி நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழிலை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.  தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் நேற்று போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் காவலில் வைத்கப்பட்டுள்லார், ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தி.மு.க. மூத்த தலைவரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி இன்று செய்தியாளர்களிடம்,

பாஜக அரசு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்திற்குக் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம்.

 திமுகவைப் போதைப்பொருள் விவகாரத்தில் களங்கப்படுத்த பா.ஜ.க. முயல்கிறது. அ.தி.மு.க அதற்கு. துணைபோகிறது.  நீதிமன்றம் தி.மு.க.வின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டியுள்ளது. கட்சியினர் தவறு செய்வது தெரியவந்தால் உடனடியாக கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கிறது. சட்டவிரோத நடவடிக்கையில் துணை போவோரை கட்சியில் வைத்திருக்கமாட்டோம்.

ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடன் தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டோம். எனவே ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் தி.மு.க. அரசைக் களங்கப்படுத்தும் நோக்கோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது”

என்று கூறினார்.

தமிழக அமைச்சர், ரகுபதி, ஜாபர் சாதிக், திமுக,