மதுரை

இன்று மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்துக்கு உத்தர பிரதேசத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த சுற்றுலா ரயிலில் மதுரை ரயில் நிலையம் அருகே இன்று தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயிலில் சுற்றுலாப் பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்திச் சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விபத்து நடந்த ரயிலை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  இந்த விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மதுரை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை ரயில் தீ விபத்து சம்பவ இடத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்து விபத்தில் உயிர் தப்பிய பயணிகளைச் சந்தித்துப் பேசி, அவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பத் தமிழக அரசு  நடவடிக்கை எடுக்த்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.