சென்னை

மிழ்த் தாய் வாழ்த்துக்கு தேசிய கீதத்துக்கு தரவேண்டிய அளவு மரியாதை தர வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் கூறி உள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் காங்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கும் போது அமர்ந்துக் கொண்டு இருந்துள்ளார்.    விழா இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தி உள்ளார்.    அவரது இந்த செய்கை பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

பல்வேறு தரப்பினர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் போது விஜயேந்திரர் எழுந்தி நிற்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர், “தேசிய கீதத்துக்கு அளிக்கும் மரியாதையை தமிழ்த் தாய் வாழ்த்திற்கும் தர வேண்டும்.    அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருப்பினும் தமிழ்த் தாய் வாழ்த்தை அமைப்பது மிகவும் தவறானது”  எனக் கூறி உள்ளார்.