வேலூர்: தமிநாடு அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி (வயது 55) இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லத்தேரி அருகே பாரதி ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பாரதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது  பாரதி என்பது தெரிய வந்தது.  அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.