மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என தமிழக நீர்வளத்துறை அறிவித்து உள்ளது.

கர்நாடக மாநில காவிரிநீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. காவிரியில் திற்நதுவிடப்பட்ட உபரிநீர் காரணமாக  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மளமளவென அதிகரித்து வருகிறது.

இதனால், அணையின் முழு கொள்ளளவான 120 அடியில் அணையின் நீர்மட்டம் நீடித்து வருகிறது.  இதனால் அணையிலிருந்து உபரி  வெறியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 2,10,000 கன அடிவரை நீர் வரத்து அதிகரித்து வந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1,80,000 கனஅடி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் பின்னர் குறைக்கபபட்ட 90ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்ட வந்தது.

தற்போது மீண்டும் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 90,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சுரங்க மற்றும் மின் நிலையம் வழியாக 23,000 கன அடியும், 16 கண் மதகு வழியாக 67,000 கன அடியும் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.04 அடியாக உள்ளது.