சென்னை: இளநிலை மருத்துவம் படிப்பதற்கான நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. தேர்வு முடிவை எதிர்நோக்கி பதற்றத்துடன் மாணவ மாணவிகள் காத்திருக்கின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க, நாடு முழுவதும் ஒரே வகையான நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறு கிறது.  இத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் நேர முடியும்.

இதற்கான தேர்வ ஜூலை மாதம் 17-ந்தேதி நடத்தப்பட்டது.  நாடு முழுவதும் நீட் தேர்வை  18 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். தமிழகத்தில் 1லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.  இந்த நிலையில் நாளை (7-ந்தேதி) நீட் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.  அதனைதொடர்ந்து நீட் தேர்வு விடைத்தாள் ஒ.எப்.ஆர். ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்டது.

தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி நாளை பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. neet.nta.nic.in இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம்.

 நீட் தேர்வு முடிவு நாளை வர இருப்பதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் நடைமுறைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.  முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடை பெறும். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி இயக்ககம் செய்து வருகிறது. NEET Exam நீட் தேர்வு