சேலம்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 812 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 12 ஆயிரத்து 396 கன அடியாக குறைந்தது. பின்னர் நேற்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பின்ன்ர அது 34,000 கனஅடியாக இருந்த நிலையில், தற்போது, 40ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

அணை முழு கொள்ளவதான மட்டம் 120 கன அடியை எட்டியதால், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இதையடுத்து  அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி என வெளியேற்றப்பட்ட  நிலையில், நேற்றுது 34 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 34,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதையடுத்து காவிரிக் கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.