சென்னை: மெட்ரோ ரயில் சேவை இனி வழக்கம் போல காலை 5.30 மணி முதல்  இரவு 11மணி இயங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது,  தமிழக அரசு  இரவு ஊரடங்கை ரத்து செய்துள்ளதால், மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம்போல இயங்கும் என்றும், வார நாட்களில் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என்றும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட போல் இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இன்று (28.01.2022) முதல் மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும்

நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 05:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட போல் இடைவெளியில் இயக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.