சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாகவும், இந்த புதிய கட்டணம்  வரும் 22 முதல் அமலுக்கு வரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு தினசரி பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே விவசாயிகள் கட்டணம் தள்ளுபடி, சிஏஏ, ஜல்லிக்கட்டு போராட்டம், கொரோனா விதிமுறை மீறல்  தொடர்பான லட்சக்கணக்கான வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தற்போது மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  சென்னையில்  நாளை மறுநாள் (22ந்தேதி) முதல் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணத்தை குறைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமாக 70 ரூபாயை ரூபாய் 50 ஆக குறைத்து பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.  ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 கி.மீ மெட்ரோ ரயில் பயணத்திற்கான கட்டணம் ரூ.10ஆக நீடிக்கும்

5கிமீ வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.20ஆக நிர்ணயம்.

5 முதல் 12 கிமீ வரையிலான மெட்ரோ பயணத்திற்கான கட்டணம் ரூ.30ஆக நிர்ணயம்.

12 முதல் 18கிமீ வரையிலான மொட்ரோ ரயில் கட்டணம் ரூ.40ஆக குறைப்பு.

21கிமீ முதல் 32 கிமீ வரையிலான மெட்ரோ ரயில் பயணத்திற்கு ரூ.50 கட்டணம்.

32 கி.மீ வரை பயணிப்பதற்கான கட்டணத்தை ரூ.70ல் இருந்து ரூ.50ஆக குறைக்கப்படும்.

வரும் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.