சென்னை:
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றி பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம்வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றி அதிகாரப்பூர்வமற்ற இணைய தளம் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பரவும் பொய்யான அறிவிப்புகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் தொடர்பான செய்திகள் சென்னை மெட்ரோ ரயிலின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.