சென்னை:
மிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 31வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெறும் என அறிவித்து உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.