சென்னை,

மாதவரத்தில் கன்டெய்னரில் உள்ள மருந்துபொருட்கள் திருடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

மாதவரத்தில் கண்டெய்னரில் இருந்து 1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்கள் திருடப்பட்டது. இந்த திருட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி அக்பர் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் நிறுவனத்தின், கண்டெய்னரில் உள்ள மருந்து பொருட்கள் திருடப்பட்டது குறித்து அந்த நிறுவன மேலாளர் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

அதன்பேரி,போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இந்த வழக்கில்  எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரமேஷ்பாபு, முகமது அலி ஜின்னா ஆகியோரை இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

விசாரணையில் இந்த திருட்டில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டது அக்பர் என்பது தெரிய வந்தது. அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு அக்பர் கைது செய்யப்பட்டார்.. குற்றவாளியான அக்பர் இருமுறை குண்டாசில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.