சென்னை: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் பாதிக்கப்பட்டு, தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என வலியுறுத்தி  தமிழக முதலமைச்சர்  பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.