சென்னை:
ரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்பு இன்று தொடங்குகிறது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவிக்கையில், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும். தொடர்ந்து மாணவர்களுக்கு மருத்துவருக்கான உடை மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டும். கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.