சென்னை:  இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ்,பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்றுமுதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கி உள்ளது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 -23 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள் ,சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் , சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.