சென்னை: உடலுக்கு தீமையை விளைவிக்கும் மையோனிஸ் உற்பத்தி- விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தமிழ்நாடு அரசு ஓராண்டு தடை விதித்து உள்ளது.
மையோனிஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக, துரித உணவுகள், துரித சிக்கன், மட்டன், பிஷ் உள்பட உணவுகளுக்கு, துணை உணவாக மயோனிஸ் எனப்படும் வெண்ணை போன்ற ஒரு பொருள் கொடுக்கப்படுகிறது. சிக்கமன், மட்டன் போன்றவற்றை இந்த மயோனிஸ் தொட்டு சாப்பிடுவதால், சுவை சற்று கூடுதலாக இருப்பதாக இன்றைய துரித உணவு பிரியர்கள் கூறுகிறார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு பல இடங்களில் இரவு நேரங்களில் புட் கோர்ட் போன்றவற்றை நிறுவவும் அனுமதி வழங்கி உள்ளது. இதுபோன்ற புட் கோர்ட் மட்டுமின்றி, பெரும்பாலான அசைவ உணவகங்களிலும் மயோனிஸ் என்பது உணவுபொருட்களுடம் வழங்குவது அவசியமாகி உள்ளது.
இந்த நிலையில், மையோனிஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு திடீரென தடை விதித்துள்ளது, மயோனிஸ் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை என அனைத்துக்கும் தமிழ்நாடு அரசு ஓராண்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இது உணவு பிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல் 8 முதல் ஒரு வருடத்திற்கு பச்சை முட்டைகளால் தயாரிக்கப்பட்ட மயோனிஸ் விற்பனை, உற்பத்தி மற்றும் சேமிப்பை தமிழ்நாடு தடை செய்துள்ளது.
சால்மோனெல்லா மற்றும் ஈ. கோலி போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, முறையற்ற தயாரிப்பு மற்றும் சேமிப்பு உணவு விஷத்திற்கு வழிவகுக்கும் என்று உணவுப் பாதுகாப்பு ஆணையர் எச்சரித்தார்.
முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷவர்மா போன்ற உணவுகளில் பிரபலமான பச்சை முட்டை அடிப்படையிலான மயோனைசே இப்போது “அதிக உணவு ஆபத்து” என்று கருதப்படுகிறது. குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு எதிரான இதே போன்ற நடவடிக்கைகளுடன் இந்தத் தடை ஒத்துப்போகிறது.
ஏற்கனவே குட்கா, பான்மாசா, பிளாஸ்டிக்குக்கு தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசு, பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களை ஒழிக்காமல் , பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்து வரும் அப்பாவி வியாபாரிகளை மட்டுமே கைது செய்து அபராதம் வசூலித்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் தடை கேள்விக்குறியதாக உள்ளது. அதுபோல பெரும்பாலான கடைகளிலும் பான் மசாலா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இதன்மீதான தடையும் கேலிக்குரியதாக உள்ள நிலையில், தற்போது, துரித உணவுகளுக்கு தொட்டுக்கொள்ளும் மயோனிஸ்-க்கு தடை விதித்துள்ளது.
இந்த தடையையாவது தமிழ்நாடு அரசு முழுமையாக நிறைவேற்றுமா அல்லது பிளாஸ்டிக் தடை போல மாமுலுக்காக மட்டுமே இருக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.