லக்னோ

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மத்தியப் பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுப் பதவியேற்றுள்ளது.  தற்போது இந்த மாநிலத்தில் திறந்த வெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின்  புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது  மத்தியப் பிரதேச பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்குப் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில்,

“மத்தியப் பிரதேசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜனதா அரசு, வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பிற ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பதற்குப் பதிலாக, வேலையில்லா திண்டாட்டத்தால் மீன், முட்டை, இறைச்சி விற்று சுயதொழிலில் ஈடுபட்டு வரும் அவர்களை ஒடுக்கும் பணிகளைத் தொடங்கி இருக்கிறது.

இது எப்படி சரியாக இருக்கும்?

சர்ச்சைக்குரிய இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”

என்று பதிவிட்டுள்ளார்.