பரிமலை

ந்த ஆண்டு சபரிமலையில் கடந்த ஆண்டை விடக் குறைவாக வருமானம் வந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரபலமானவை ஆகும்.  இந்த நேரத்தில் நாடெங்கும் இருந்து லட்சக்கணக்கானோர் விரதம் இருந்து மலைக்கு வந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கமாகும். 

கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கடந்த 28 நாட்களில் சபரிமலை கோவிலுக்கு ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகையும் சுமார் 1.5 லட்சம் குறைந்து 18 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.