விருதுநகர்: மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 5நாட்கள்  அனுமதி வழங்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரிமலையில், சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலுக்கு மாதந்தோறும் மாந்தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

இந்த நிலையில், மாசி மாத பவுர்ணமி வரும் 7-ந் தேதி வருவதையொட்டி,  மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல 5நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, வரும்  4-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலைமீது சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி,  10 வயதுக்கு குறைவானவர்களுக்கும்,  60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.

மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பக்தர்கள், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ளதுடன், மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் யாரும்  குளிக்க கூடாது என்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மலைக்கோவிலில் இரவு தங்க ஒருவருக்கும்  அனுமதி என்றும், மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.