திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூரலிகான் போட்டியிடுகிறார்.அதற்காக களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். தினம் ஒரு வகையான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.இவரின் வித்தியாசமான பிரசாரத்தை காண்பதற்காகவே ஏராளமான மக்கள் கூட்டம் கூடுகிறது.

இந்த நிலையில், நேற்று அழகம்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் மன்சூரலிகான்பிரசாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கு கூடியிருந்த கட்சியினரும், பொதுமக்களும் பதட்டமடைந்து அவரை உடனடியாக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்சூரலிகான், சிகிச்சை முடிந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.