புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 13ஆம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன்சிங், டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடலில் தற்போது ரத்தத்தட்டுகள் மெல்ல அதிகரித்து வருவதாகவும், அவர் அபாயக்கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel