பிரபாஸ், அனுஷ்கா, சத்யாரஜ், ராணா, ரம்யா கிருஷ்ணன் நடித்த படம் பாகுபலி, இப் படத்தை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கினார், 2 பாகங்களாக உருவாக்க திட்டமிட்ட ராஜ மவுலி அதற்காக முன்னதாகவே சில ஸ்கிரிப்ட் வேலைகளை செய்து முடித்தார். அதாவது முதல்பாகம் ஷூட்டிங்கின்போதே இரண் டாம் பாகத்திற்கான் 30 சதவீத காட்சிகளை யும் படமாக்கினார். பாகுபலி 2ம் பாகம் படமானபோது மீதமுள்ள காட்சிகளை படமாக்கினார்.

ராஜமவுலி பாணியை தற்போது மணிரத்னம் கையாள்கிறார். பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தை இரண்டு பாகமாக இயக்கு கிறார் மணிரத்னம். இதில் விக்ரம், ஐஸ்வர் யாராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முதல்பாகம் படப்பிடிப்பி லேயே 2ம் பாகத்துக்கான பல முக்கிய காட்சி களை மணிரத்னம் படமாக்க திட்டமிட்டிருக் கிறார்.
கொரோனா ஊரடங்கால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப் பை தொடங்க திட்டமிடப்பட்டது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே திட்டமிட்டபடி செப்டம்பரில் படப்பிடிப்பு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.