திரைப்படங்களில் குருக்களாக நடித்து பிரபலமாகிய மங்கள நாத குருக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாகவும், அவர்களது உடலை தகனம் செய்வதற்கு தங்களால் முடிந்த பண உதவிகளை அளிக்கும் படி சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவை கண்ட பலர் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் உயிரோடு இருப்பதாகவும், பொய்யான தகவலை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் மங்கள நாத குருக்கள்.

மேலும் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக அந்த பதிவை நீக்கக்கோரியும், பணத்தை வசூல் செய்து வரும் அந்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்துள்ளார் .