சென்னை:  மாண்டஸ் புயல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்,  கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்  என கூறினார். மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறினார். சென்னையில் 2 நாட்கள் மழை பெய்யும் என்றும் கூறினார்.

சென்னையில் இருந்து தென் கிழக்கில் 550 கி.மீ. தொலைவில் காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புயல் கரையை கடக்கும். நாளை இரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  நாளை 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். டிசம்பர் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் டிசம்பர் 10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நாளை தமிழ்நாடு, ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன்,   “மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூரில் மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

நாளை (டிச.9) காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார். தற்போதைய நிலவரப்படி வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும். இதன் காரணமாக 8, 9, 10 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் வியாழக்கிழமை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (டிசம்பர் 10-ம் தேதி) , சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மாண்டல் புயல் காரணமாக இன்று தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டரும் சமயங்களில் 60 கி.மீட்டர் வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும். வெள்ளிக்கிழமை (டிச.9) காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில், சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.9-ம் தேதி மாலை முதல் டிச.10-ம் தேதி காலை வரையிலான காலக்கட்டத்தில் வடதமிழகத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில், மணிக்கு 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 80 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

தென் தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வியாழன்று சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் என்ற வேகத்தில் சமயங்களில் 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வெள்ளிக்கிழமையன்று மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 10-ம் தேதி வரை, தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எ

னவே மீனவர்கள் 10-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும்,ன்னை மற்று புறநகரைப் பொருத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.