கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராமர் கோவிலை வைத்து  பாஜக வித்தை காட்டுவதாக விமர்சித்துள்ளார்.

வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. உத்தர பிரதேச மாநில அரசு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றி உள்ளார்.

அவர் தனது உரையில்,

“எனக்கு ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைத்து சமூகத்தினரையும் இணைக்கக் கூடிய பண்டிகைகள் மீது  நம்பிக்கை உள்ளது. பாஜக நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமர் கோவில் திறப்பு விழாவை . நடத்துகிறது.  மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமர் கோவிலை வைத்து பாஜக வித்தை காட்டி வருகிறது. எனக்கு மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் சிறிதும் நம்பிக்கை இல்லை.”

என்று  தெரிவித்துள்ளார்.