பிக்பாஸ் மலையாளம் சீசன் 3 போட்டியாளரான குணசித்திர நடிகை பாக்கியலட்சுமியின் முன்னாள் கணவர் ரமேஷ் காலமானார்.

நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், பிக்பாஸ் தனது முன்னாள் கணவர் பற்றிய தகவலையும், வீட்டிற்கு செல்ல விரும்புகிறாரா என்பது பற்றியும் பாக்யலட்சுமியிடம் கேட்கப்பட்டது.

அந்த எபிசோடில் பிக் பாஸ் பாக்யலட்சுமியை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து, அவருக்கு ஒரு துக்க செய்தி இருப்பதாக கூறினார். கன்பெஷன் அறையை விட்டு வெளியே வந்த பிறகும் பாக்யலட்சுமி தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.

தனது முன்னாள் கணவர் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தார் என்றும் அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதாகவும் விளக்கினார். மேலும், தனது கிட்னியை தானம் செய்ய முன்வந்ததாகவும் ஈகோவால் கணவர் மறுத்து விட்டார் என்றும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன் அவரை சந்தித்ததாகவும் கூட தெரிவித்தார்.

பின்னர் பாக்யலட்சுமி, தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும், இல்லையென்றால் கணவர் இறந்த தகவல் தெரிந்த பிறகும் தொடர்ந்து இருப்பது விமர்சனமாகி விடும் என்று கூறியுள்ளார்.