ஆதமிண்டே மகன் அபு, இந்தியன் ருப்பீ, ஆமென் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் சசி கலிங்கா.

2009ஆம் ஆண்டு வெளியான ‘கேரளா கஃபே’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான இவரின் நடிப்பு மம்மூட்டியின் ‘ப்ரான்ச்சியேட்டன் அண்ட் தி செய்ண்ட்’ திரைப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினையால் கல்லீரலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் கோழிகோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சசி கலிங்கா மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.