போலீசாரால் அப்பாவி மக்கள் அடித்து கொடூர துன்புறுத்த லுக்குள்ளாகுவதற்கு எதிராக காவல் துறை புகார் ஆணையத்தை கோர்ட் வழிகாட்டுதல்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
இதுபற்றிய விளக்கத்தை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சாத்தான்குளம் தந்தை- மகன் காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்ட தாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னை உயர் நீதிமன் றத்தில் நீதி போதணை மனுவை தாக்கல் செய்தது. அம் மனுவானது தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013 இன் படி நிறுவப்பட்டுள்ள காவல் துறை புகார் ஆணையத்தின் அமைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சட்டம் முறையானதாக இல்லை என்றும் நடைமுறை தன்மைக்கு போதுமான தாக இல்லை என்றும் உயர்நீதி மன்றம் வழிகாட்டுதலுக்கு புறம்பானதாக உள்ளது எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற வழிகாட்டு தலின்படி காவல்துறை புகார் ஆணையமானது மாநில தலைமை ஆணை யம் மற்றும் மாவட்ட வாரி யான ஆணையரங்களாக அமைக்கப்படும் என்றும் மாநில தலைமை ஆணை யத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையோ அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளை யோ பணியமர்த்த வேண்டும் என்றும் மாவட்ட வாரியான ஆணையங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியையோ அல்லது ஓய்வு பெற்ற காவலர் அல்லாத அரசு ஊழியர்களையோ பணியமர்த்த வேண்டும் என்றும் உயர்நீதி மன்றம் வழிகாட்டுதல் இருக்கும் பட்சத்தில் இந்த அரசு வழிகாட்டுதல்களுக்கு மாறாக செயல்பட்டதன் விளைவு இந்த இரட்டைப் படுகொலை சம்பவம்.
இந்த அரசு, ஆணையங் களை அமைத்து அதில் காவல் அதிகாரிகளையே நிர்வாகிகளாக பணியமர்த்தியுள்ளது தான் இதன் தோல்விக்கு காரணம். அது மட்டுமன்றி இவ்வாறு செய்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அதன் சரத்துக்களும் எதிரானதாக உள்ளது. அதனாலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த அரசின் மெத்தன போக்கை எதிர்த்து மேற்கண்ட சட்டத்தை திருத்தி ஆணையத்தை மாற்றியமைக்க நீதிமன் றத்தின் கதவுகளை தட்ட நேர்ந்துள்ளது.
இவ்வாறு மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.