சென்னை:

சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி செல்லும் ரயில் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படு வதால் இன்றும், நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்திருப்பதாவ தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை-திருத்தணி பிரிவில் பட்டாபிராம் கிழக்கு-திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், சனி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச், 24, 25) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 24-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்:

மூர் மார்க்கெட் -திருவள்ளூர் வரை:  காலை 9.15, 9.30, நண்பகல் 12.10, மதியம் 1.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள், மற்றும், 

திருவள்ளூர்-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை காலை 10.05, காலை 10.50, முற்பகல் 11.25, பிற்பகல் 2.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள், 

திருவள்ளூர்-வேளச்சேரி வரை முற்பகல் 11.05 மணிக்கு  இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி-சென்னை கடற்கரை வரை மதியம் 1.35 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும்

 மார்ச் 24-ம்  (நாளை)  தேதி  ரத்து செய்யப்படும் பகுதி நேர ரயில்கள் 

வேளச்சேரி-திருத்தணி வரை காலை 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரி-திருவள்ளூர் வரை நண்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து.

வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவப் பகுதி வரை நண்பகல் 12.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து.

வேளச்சேரி-அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை வரை மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்.  விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். 

திருவள்ளூரில் இருந்து பட்டாபிராம் கிழக்கு வரை சில ரயில்கள் விரைவுப் பாதையில் இயக்கப்படவுள்ளதால், மார்ச் 24 ஆம் தேதி புட்லூர், திருநின்றவூர், நெமிலிசேரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது.

அதன்விவரம்: 
1. திருத்தணி-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
2. அரக்கோணம்-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை காலை 10.50, நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்.
3. அரக்கோணம்-ஆவடி வரை முற்பகல் 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
4. திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை நண்பகல் 12 மணி, மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
5. கடம்பத்தூர்-வேளச்சேரி வரை நண்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
6. திருவள்ளூர்-வேளச்சேரி வரை மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.

சிறப்பு பயணிகள் ரயில்கள் 

மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-திருத்தணி வரை நண்பகல் 12.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.

ஆவடி-மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை மதியம் 1.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.

இதேபோல, மார்ச் 25-ஆம் தேதியும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து, பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சில மின்சார ரயில்கள் மாற்றப்பாதையில் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.