சென்னை:  பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல்  23ந்தேதி வரை 6 புறநகர் ரயில் சேவை இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரத்தில்  ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் ஜூன் 23 வரை 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து இரவு 10.25க்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில் (40144) ஜூன் 15, 16, 17, 18,20,21,22ல் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.