சென்னை,

டற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் குறிப்பிட்ட 5 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி ரெயில்நிலையம் வரை மாடி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், இன்றும் நாளையும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை 5 மணி நேரம் இயக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே விடுத்துள்ள அறிக்கையில்,

கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் ரெயில்கள்  இன்று (18-ந்தேதி) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில்கள் இயங்காது. அதேபோல் நாளை காலையிலும் 11 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில்கள் இயங்காது  என்று அறிவித்துள்ளது.

பணிகள் முடிந்து திங்கட்கிழமை (20-ந்தேதி) வழக்கம் போல் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.