மும்பை: மாநில ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ்தாக்கரே அரசு நாளை (30ந்தேதி) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை கேட்டு சிவசேனா தரப்பில் உச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது இன்று காரசார விசாரணை நடைபெற்ற நிலையில், நாளையும்  விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, மாநில அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியது. இதையடுத்து, 30ந்தேதி மாலை 5மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிவசேனா சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில் ‘‘நாளை நம்பிக்கை வாக்கெடுப் புக்கு உத்தரவிடுவதில் ஆளுநர் சூப்பர்சோனிக் வேகத்தில் செயல்படுகிறார். 2என்சிபி எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநாட்டில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் அவசர கதியில் ஏன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதுடன்,  34 எம்எல்ஏக்கள் பிரிந்து செல்லவில்லை என்றார்.

மேலும், நம்பிக்கை வாகெடுப்பில் யார் வாக்களிக்க முடியும், முடியாது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி விட்டால் குறிப்பிட்ட நபரை சட்டப்பேரவை உறுப்பினராக கருத முடியாது. தகுதிநீக்க நோட்டீஸ் நிலுவையில் இருக்கும் போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எப்படி வாக்களிக்க முடியும் என்றும்  கேள்வி எழுப்பியவர்,  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் தகுதி நீக்க நடவடிக்கைக்கு அனுமதி தேவை.

நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் முதலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும்’ எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 34 எம்எல்ஏக்கள் பிரிந்து செல்லவில்லை என்று நீங்கள் மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பியது. தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நிலுவையில் உள்ள தகுதி நீக்க நோட்டீஸ் வழக்கிற்கும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் என்ன சம்பந்தம் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. இதையடுத்து, விசாரணை  நாளையும் தொடரும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் இன்று மும்பை திரும்பியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.